Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Saturday, January 29, 2011

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

அஸ்ஸலாமு அலைக்கும்...........

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில்



ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்



26.01.2011 குடியரசு தினத்தன்று மஹாராஜபுரத்தில் கிராம சபை பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவும், சில கோரிக்கைகளை முன் வைப்பதற்காகவும் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் "ஜாகிர் உசேன்", "அபூதஹிர்", "அப்துல் காசிம்" ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு மஹாரஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் "திரு.கனகராஜ்" அவர்களை சந்திக்க சென்றது.





சந்திப்பின் நோக்கம் என்னவென்றால், 2 வாரங்களுக்கு முன்பு நமது முஸ்லிம் தெரு 6வது வார்டை இரண்டாக பிரித்து, இரண்டையும் மற்ற வார்டுகளுடன் தனித்தனியாக சேர்த்து விட்டார்கள் என்ற செய்தி நமக்கு கிட்டியது. இதனால் நம்முடைய முஸ்லிம் தெருவிற்கு தேர்தல் சமயத்தில் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படகூடும். இதனடிப்படையிலே நாம் கிராம சபை கூட்டத்திற்கு சென்று, நம்முடைய கருத்தை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் எடுத்து வைத்தோம். அதற்கவர், "இல்லை உங்களுக்கு தவறான செய்தி வந்துள்ளது. நாங்கள் மக்கள் தொகையின் அடிப்படையிலும், 1 வார்டுக்கு 1 மெம்பெர் என்ற அடிப்படயிலும் வார்டுகளை தனித்தனயாக பிரித்துள்ளோம். அதனடிப்படையில் முஸ்லிம் தெருவை தனி வார்டாகத்தான் பிரித்துள்ளொம், அதனை இரண்டாக பிரித்து மற்ற வார்டுகளுடன் சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.



ஒருவழியாக வார்டு பிரச்சினையிலிருந்து தெளிவு பெற்றோம், இருந்தாலும் ஒரு சின்ன கவலை என்னவென்றால், ஒவ்வொரு வார்டுகளையும் 350 பேர் கொண்ட மக்கள்தொகையின் அடிப்படயில்தான் பிரித்துள்ளர்கள். ஆனால் நம் முஸ்லிம் தெருவின் மக்கள்தொகை 750யை தாண்டும். ஆகவே நாம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம், என்னவென்றால், ஒரு வார்டுக்கு 350 பேர் மக்கள்தொகை என்று வைத்துகொண்டால், எங்களுடைய முஸ்லிம் தெருவை 2 பெரும் வார்டுகளாக பிரிக்க என்ன தகுதி இல்லை என கேட்டோம். மேலும் முஸ்லிம் தெருவை 2 வார்டாக பிரிக்கும் பட்சத்தில், 2 முஸ்லிம் மெம்பெர்கள் கிடைப்பார்கள் என்ற நோக்குடனும் அவரிடம் கேட்டொம். அதற்கவர்,2001ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை பிரித்துள்ளோம். 2011ல் மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மீண்டும் வார்டுகள் புதிதாக பிரிக்கப்படும் என்றார்.





இறுதியாக நாம் வைத்த கோரிக்கைகள்:

*புதிதாக எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம் தெருவை 2 பெரும் வாடுகளாக பிரித்து 2 முஸ்லிம் மெம்பெர்களை நியமிக்க வேண்டும்.

*பிஸ்மி கடையிலிருந்து ஜாகிர் கடை வரை உள்ள பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் புதிதாக வாருகால் அமைக்க வேன்டும்.

*பள்ளிவாசளில் இடப்பற்றாக்குறை காரணமாக புதிதாக கப்ருஸ்தான் அமைத்து தர வேண்டும்.






இந்த கோரிக்கைகளுடன் கிராம சபை பொதுக்கூட்டம் இனிதே நிறைவடந்தது,.,.






ஹிதாயத்துல் இளைஞர் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பாக கிராம சபை பொதுகூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி












கிராம சபை கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்




































No comments:

Post a Comment