Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Sunday, September 4, 2011

ஹிஜாப் !!! ..........

ஹிஜாப் !!!




பத்திரமாயிருக்கிறேன்...

எனக்குள் - நான்

மிக மிகப்பத்திரமாய்....!!!



எச்சில் இலைமீதான

இலையான்களைப்போல

எவர் கண்ணும்

என்னை

அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!



டீக்கடை தாண்டி

நடந்து போகையில்...

எல்லோர் கவனமும் பறித்து

என்னைப்பற்றியே

விமர்சித்துத் தொலைத்து

பாவங்களால் நிரம்பிவழிய...

வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!



என்னைப்

பின்தொடர்ந்து வா...

விசிலடி..!!!!

கேலிசெய்....!!!

என யாரையும்...

என் உடைகளால்

சீண்டிவிடுவதில்லை நான்...!!!



வகுப்பறைகளிலும்...

பாடப்புத்தகம் மீதான

அடுத்தவர் கண்களை

ஒருபோதும்

கிழித்துப்போடுவதில்லை-நான்!!!



விழிகளால் ஊரே ரசித்து...

கழித்துப்போட்ட

எச்சில் பண்டமாய்

எப்போதும் இருந்ததில்லை - நான்!!!



அல்லாஹ்வின் கட்டளைகளில்;

கணவனின் கண்களில்;

நான் மிகப்பெரும்

அழகியாய்

உயர்ந்து நிற்கிறேன்...!!!



அறியாமையினால்;

இவர்கள்தான்

உரத்துக்கூவுகிறார்கள்....

ஹிஜாப்

அடக்குமுறையென்று!!!!!!!!!



பாவம் அவர்கள்....;

.......................

அநாவசிய பார்வைகளை....

அந்நியரின் விமர்சனங்களை ....

அனாச்சாரங்களை ....

அடக்கிவைக்கும்

அதிஉன்னத ஆயுதம்....

ஹிஜாப்

என்பதை அறியாமல்....!!!!



நன்றி : றஹீமா பைஷால்

From Satyamargam



No comments:

Post a Comment