தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - தலைவர் டாக்டர் பேராசிரியர் M .H . ஜவாஹிருல்லாஹ் அவர்களும் மனோ தத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களும் கத்தாரில் பல இஸ்லாமிய நிகழ்சிகளில் கலந்துகொண்டார்கள் ........
தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் எழுச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் இன்றைய உலகில் அமெரிக்கா முதல் சீனா வரை இஸ்லாம் எவ்வாறு எழுச்சிப் பெற்று வருகின்றது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
இதன் பின் பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாமும் நான் கடந்து வந்த மதங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஹிந்து மதத்தில் இருந்து தொடங்கி பெரியாரின் தொண்டர் பிறகு பவுத்தம் வரை தான் கடந்து வந்த பாதைகளை விவரித்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் பிறகு 2000 முதல் பத்தாண்டுகள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆய்வுச் செய்து இஸ்லாத்தின் தன்னை இணைத்துக் கொண்டதை விவரித்தார்.
மாநாடு போன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கத்தாரில் வாழும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இது வரை காணாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். இந்நிகழ்ச்சி கத்தாரில் வாழும் தமிழ் அறிந்த மக்களிடையே பெரும் பேரழுச்சியை ஏற்படுத்தியது.
பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - உடன் BEMCO தமிழ் சகோதரர்கள் சந்திப்பு...... |
பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் - உடன் BEMCO தமிழ் சகோதரர்கள் சந்திப்பு...... |
டாக்டர் அப்துல்லாஹ் உடன் முஹமது இல்யாஸ் |
டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் முஹமது இல்யாஸ் |
டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் ரபீக் பாபு |
டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் முஹமது சித்தீக் |
No comments:
Post a Comment