ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்.................
அல்லஹ்வுடைய கிருபையால் 16.01.2001 ஞாயிற்று அன்று ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக "ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்" பள்ளிவாசல் தோப்பில் வைத்து இனிதே நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!!!
சகோ . "ஷாஜஹான்" மற்றும் சகோ."அப்துஷ்ஷுக்கூர்" ஆகியோரின் ஆலோசனைப்படி, பள்ளிவாசல் தோப்பில் வைத்து இளைஞர்களுக்கென்று தனியாக ஒருநாள் தர்பியா ப்ரொகிராம் நடத்த வேண்டும் என முடிவெடுக்கபட்டது. அதனடிப்படையில் 16.01.2011 ஞாயிறு அன்று மதிய உணவோடு தர்பியா ப்ரொகிராம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி
அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் தம்பிபட்டி
ஜும்மா பள்ளிவாசல் இமாம் முஹமது ஜமீல் பைஜி மற்றும் மகாராஜபுரம் பள்ளிவாசல் ஹஜ்ரத் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
முதல் அமர்விலே கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம்.முதல் அமர்வில் பல அருமையான கேள்விகள் இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அருமையான விளக்கங்களை மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அளித்தார்கள் . கேள்வி-பதில் நிகழ்ச்சியோடு முத்ல் அமர்வு இனிதே முடிவடைந்தது.பின்பு லுஹர் தொழுகை நடைபெற்றது.
மதிய உணவுக்கு பின் இரண்டாம் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் "இஸ்லாத்தில் இளைஞர்கள் பங்கு" என்ற தலைப்பில் மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அருமையாக உரையாற்றினார்கள்.
சமையல் பொறுப்பை "முஜிபுர் ரஹ்மான்"(நமதூரில் புதிதாக ஹோட்டல் கடை ஆரம்பித்துள்ளார்) ஏற்றுக்கொண்டார்.அல்லாஹ் அவருக்கு அபிவிருத்தியை வழங்குவானாக!
ப்ரோக்ராமில் சில அற்புதமான காட்சிகள்.........
No comments:
Post a Comment